25,000 அரிசியில் வாக்கு வீரன்- கோவை ஓவிய ஆசிரியர் அசத்தல்…

கோவை: 25 ஆயிரம் அரிசியில் வாக்கு வீரன் ஓவியத்தை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் கோவையை சேர்ந்த ஓவிய ஆசிரியர்.

Advertisement

கோவையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் 25,000 அரிசியை கொண்டு 100% வாக்குபதிவு என்பதை ஓவியமாக வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே சமயம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன. தன்னார்வலர்களும் பல்வேறு வழிகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த மனோகரன் என்ற தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் மக்களிடையே 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 25,000 அரிசியை கொண்டு கோவை மாவட்ட தேர்தல் எம்பளமான வாக்குவீரன் இருவாச்சி பறவை ஓவியத்தை வடிவமைத்துள்ளார். அதில் 15,000 அரிசியில் 100% Vote என்று எழுதி உள்ளார். 80 மணி நேரத்தை செலவழித்து இதனை வடிவமைத்துள்ளார்.

தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% என்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...