கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம் வார்டு எண். 50க்கு உட்பட்ட உடையாம்பாளையம் ராம் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் மத்திய மண்டலம் வார்டு எண் 62க்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் உயர் மட்ட பாலம் அருகில் இராஜா வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக கிழக்கு மண்டலம் வார்டு எண். 61 க்கு உட்பட்ட சிங்காநல்லூர் குளத்தேரி பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள். நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.




