கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு- அதிகாரிகள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை…

கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு விவகாரத்தில் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Advertisement

கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு விவகாரத்தில் உதவி ஆணையர் உட்பட அதிகாரிகளை பணிநிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

அதில் ஒரு உண்டியலை மட்டும் ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து அதில் இருந்த பணத்தை திருடியதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்தார். அதனை தொடர்ந்து ,இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அந்த விசாரணையில் ஒரு உண்டியலை மட்டும் எண்ணாமல் அதிலிருந்த 30 ஆயிரம் பணத்தை கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன் , சரவணன் , பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் புகாரின் பேரின் பேரில் பூசாரி உட்பட 4 பேரையும்
உக்கடம் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறவ அமைச்சர் ரமேஷ், கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பாலசுப்பிமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும், கண்டறியாமல் இருந்த இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, கோவில் செயல் அலுவலர் குமார்,சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் ஆகியோரை சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு; கண் தானத்தில் 76 ஆயிரம் பேரை இணைப்பதே இலக்கு – துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை ஜி.கே.என்.எம். செவிலியர் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு நாடு முழுவதும் 76 ஆயிரம் பேரிடம் கண் தான உறுதிமொழி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...