பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் சமர்பிக்க அறிவுறுத்தல்…

கோவை: பத்ம விருதுகளை விண்ணப்பங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை பத்ம விபுஷன் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ வழங்க அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம்சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகள் தொழில் இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.

Advertisement

இது குறித்தான விவரங்களை
மேலும் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு தொடர்பான விண்ணப்பங்கள் மட்டுமே வேண்டும் விளையாட்டு அலுவலகத்தில் பெறப்படும்விளையாட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களுடன் 31.07.2026 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம் அவர்களிடம் நேரில் வந்து சமர்பித்திட வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜீவன் ரக்‌ஷா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

கோவை: இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல்,...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...