கோவை: கோவையில் 7 தலைமுறைகளைக் கண்ட இரத்தினம்மாள் பாட்டி 100 வது பிறந்த நாளை வாரிசுகளுடன் கொண்டாடினார்.
கோவையில் 7 தலைமுறைகளைக் கண்ட இரத்தினம்மாள் பாட்டி தனது 100 வது பிறந்த நாளை உறவினர்களுடன் கொண்டாடினார். மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள், எல்லுப் பேரன், பேத்திகள் என அவருடைய வாரிசுகள், உறவினர்கள் அனைவரும் பரிசுகள் வழங்கி இரத்தினம்மாளின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.
கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் இரத்தினம்மாள். 1926ம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. இவருக்கும் கிருஷ்ணசாமி கவுண்டர் என்பவருக்கும் திருமணம் ஆகி 4 குழந்தைகள், 7 பேரன், பேத்திகள், 8 கொள்ளு பேரன், பேத்திகள், ஒரு எள்ளு பேரன் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் தனது 100 வது பிறந்தநாளை அவரது வாரிசுகள் உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினரை அழைத்து விழாவாக கொண்டாடினர். இதில் கலந்து கொண்ட அவரது வாரிசுகளான மகன், மகள், மருமகன், மருமகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள், எல்லுப் பேரன், பேத்திகள் மற்றும் உறவினர்கள் வாழ்த்தியதோடு பரிசுகள் வழங்கி அவரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர்.
இவ்விழாவில் அவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக உருவாக்கி அனைவருக்கும் வழங்கினர். மேலும் கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.




