தவெக அரசின் முதல் பட்ஜெட்- இரயில்வே உற்பத்தியாளர் நல தலைவர் கூறிய கருத்து…

கோவை: தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என
இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் பேட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தில் இன்று புதியதாக ஆட்சியமைத்துள்ள தவெக அரசின் பட்ஜெட் குறித்து கோவையில் தொழில் துறையினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழக அரசு முதல் முறை தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எங்களுக்கு முழுக்க ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அரசிடம் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம்.

Advertisement

மின் கட்டணத்தில் நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தமிழக முதல்வரை கடந்த வாரம், சந்தித்து மனு அளித்துள்ளோம். எதாவது ஒரு கோரிக்கையை மட்டும் முன் வையுங்கள் என்று முதல் கூறினார் அப்பொழுது கூட நிலை கட்டனத்தை, பாதியாக குறைக்க தெரிவித்தோம்.

இது சம்பந்தமாக உரிய பரிசீலனை நடத்தி நல்ல அறிவிப்பு வெளியிடுவதாக முதல்வர் எங்களிடம் கூறினார்.

Advertisement

ஆனால் அது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் அவர் வெளியிடாதது முழு ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று தெரிவித்தார்.

இதன் பின்னால் ஏதேனும் அறிவிப்பு வருமா என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று கூறிய அவர். நிலை கட்டணத்தை பாதியாக குறைத்தால் மட்டுமே குறுந்தொழிலுக்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, அவை அனைத்தும் சிப்காட் மூலமாக துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்,

அந்த ஐந்து தொழில்பேட்டைகளிலும் குறுந்தொழிலுக்கு என்று சலுகை விலையில் பல்வேறு திட்டங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கான அறிவிப்பும் பின்னால் வரும் என்று எதிர்பார்ப்பும் தொழில்துறையினருக்கு உள்ளதாக தெரிவித்தார்.

புதியதாக தொழில் கொள்கைகள் என்ற ஒரு திட்டத்தை தெரிவித்துள்ளனர்,
அந்த கொள்கையில் குறுந்தொழில்களுக்கு என்று ஒரு சில கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என்றும், இது குறித்து எங்களிடம் உரிய பேச்சு வார்த்தை நடத்தி, அதில் உள்ள இடையூறுகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள், தெரிந்து பின்னர் அது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறுந்தொழில் முனைவோர்களுக்கு வட்டி மானியம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், கடந்த காலங்களில் மாவட்ட தொழில் மையத்தில் 6 விழுக்காடுகள் வரை தொழில் மானியம் வழங்கிவந்த நிலையில் தற்போது 12 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே பழைய திட்டத்தின் கீழ் மீண்டும் தொழில் தொல்லையினருக்கு ஆறு சதவீத வட்டி மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்படி தொடரும் பட்சத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள், உருவாக வாய்ப்பு ஏற்படும் என்று கூறியவர், தொழில் துறைக்கு கடந்த பட்ஜெட்டின் பொழுது வழங்கப்பட வேண்டிய கடன் தொகை 100 கோடிக்கு மேல் நிலுவையில், இருந்து வருகின்றது, மீதமுள்ள 258 கோடி மட்டுமே தமிழகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்க்கு தொழில் துறையினருக்கு கூடுதலாக மேலும் தேவைப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் புதிய புதிய தொழில்கள் உருவாக்கினால் மட்டுமே தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி பெருகும் என்று கூறியவர், முதலீட்டு மானியங்களை தமிழக அரசு தர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசுகள் தொழில் துறையினருக்கு பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றது, அதேபோல் தமிழகத்திலும் அரசு வழங்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தற்போது அறிவிக்க பட்ட பட்ஜெட் ஓரளவிற்கு வரவேற்பதாக இருந்தாலும், இன்னும் கூடுதல் திட்டங்களை அறிவித்திருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்றார்.

புதியதாக ஆட்சி அமைத்துள்ள அரசு என்பதால் இத்தகைய பட்ஜெட் குறித்த விமர்சனங்களை வைக்க முடியாமல் இருந்தாலும் இனி வரும் காலங்களில் கூடுதலாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக வெற்றி கழகம் தங்களது தேர்தல் அறிக்கையில் தொழில்துறையினர் சந்தித்து வருகின்ற நிலை கட்டணத்தை பாதியாக குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர், ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதே நிலை கட்டணம் தொடர்ந்தால் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை திறனை இழக்கக்கூடும், இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும். தொழில் துறையினர் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக கூடும் என்று எச்சரித்துள்ளார். மொத்தத்தில் இந்த பட்ஜெட் தொழில் துறையினருக்கு ஒரு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...