கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு மண்டியிட்டப்படியே வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்.
காங்கிரஸ் நிர்வாகியான இமயம் ரஹ்மத்துல்லா கோவை மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவரது தலைமையில், கைகளில் கோரிக்கை மனுக்களை ஏந்தியபடி நிர்வாகிகள் மண்டியிட்டபடியே மாநகராட்சி அலுவலகத்திற்குள் வருகை புரிந்து கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதில் தெரு நாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், சாரமேடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உக்கடம் படகு இல்லத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து குறைந்த விலையில் படகு சவாரியை இயக்க வேண்டும், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் இறங்குதள பகுதியில் வேலை தடைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“மக்களின் கோரிக்கைகளுக்காக மண்டியிட்டு வந்த காங்கிரசார்!” என்ற இந்தப் போராட்டம் மாநகராட்சி அலுவலகப் பகுதியில் கவனத்தை ஈர்த்தது.




