ஒரு செங்கலைக் கூட வைக்க முடியாது- மேகதாது விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…

கோவை: மேகதாதுவில் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பேரவைத் தலைவரும், முதலமைச்சரும் விரும்புவது போல தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக சட்டசபையில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பேச வேண்டும் என்றார்.

வார்த்தை ஜாலங்களால் வரும் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் 234 எம்.எல்.ஏ.க்களும் மக்கள் பணிகளைத் தொய்வின்றி செய்ய கார், டிரைவர் மற்றும் உதவியாளர் மிக அவசியம். உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கே வாகனங்கள் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு இது தேவையான ஒன்று என்றும் ஆந்திராவிலும் இத்தகைய நடைமுறை உள்ளது என்றார். தங்கள் ஆட்சியில் செய்ய முடியாத விரக்தியில்தான் எதிர்க்கட்சியினர் இதை விமர்சிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

பல்வேறு நிதிச்சுமைகளுக்கு மத்தியிலும் மக்கள் பணிக்காகவே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மிக உறுதியாக உள்ளது. அங்கு ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு. டெல்டா பாசன நிலங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடமும் முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தின் நிலைப்பாட்டை மீறி அவர்களால் நிச்சயம் அணை கட்ட முடியாது என்றும்
வறட்சி நிவாரணத்தைப் பொறுத்தவரை செப்டம்பர் மாத இறுதிக்குப் பிறகு மழையின் அளவு, பயிர் சேதம் மற்றும் நிலத்தின் ஈரப்பதம் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நிதி விடுவிக்கப்படும் என்றார்.

தேனி மாவட்ட வட்டாட்சியர் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியிட்ட தகவல் கிடைத்த உடனேயே, இரவோடு இரவாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த சுற்றறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது. அரசு விதிகளின்படி அவர் மீது துறைரீதியான மேல்நடவடிக்கை சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் என கூறினார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...