கோவையில் வீட்டின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்ற யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: வீடுகளின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ள சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை திருவள்ளுவர் நகரில் வீடுகளின் முன்புற கதவுகளை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு சென்ற காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை தடாகம் பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். நேற்று முன் தினம் இரவு தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிச் சென்ற ஒற்றை காட்டு யானை நேற்று திருவள்ளுவர் நகர் குன்று பெருமாள் கோவில் பகுதியில் சுற்றி திரிந்தது.

அப்பொழுது ஒரு பசு மாட்டையும் தாக்க முயன்றது. இது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இந்த நிலையில் அந்த ஒற்றை காட்டு யானையின் மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த அந்த காட்டு யானை இரண்டு வீட்டுகளின் கேட்டுகளை லாவகமாக திறந்து உள்ளே சென்று நோட்டமிட்டு சென்றுள்ளது.

தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் உடனடியாக இந்த காட்டு யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாங்காய் பறித்து தருவதாக அழைத்த 15 வயது உறவினர் சிறுவன்… 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், 15 வயது சிறுவனிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை- வனத்துறை நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கோவை: கோவையில் பசுமாட்டை தாக்க முயன்ற காட்டுயானையின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் காட்டு யானையை அடர்வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில்...