கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கோவை மாநகர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் காரணமாக அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
இன்று காலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் திடீரென கொட்டப்பட்டு இருந்த குப்பைகளில் இருந்து தீப்பிடித்து எரிய துவங்கி உள்ளது.
உடனடியாக இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு பின்னர் அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வாகனங்களை வரவழைத்து தீயை அணைத்தனர்.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சியளித்தது.





