கோவை: ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில் Full Vibe செய்த மாணவ மாணவிகள்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளைய தினம் கொண்டாட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்ற மாணவ மாணவிகள் கேரள பாரம்பரிய நடனம் ஆடினர். தொடர்ந்து செண்டை மேளம் நிகழ்வில் மகாபலி மன்னனுடன் மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில், நடன நிகழ்ச்சிகள், டிஜே நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் அனைத்து மாணவ மாணவிகளும் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டது.





