கோவை: கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள கிராண்ட் ரீகன்ட் ஹாலில் இன்று நடைபெற்றது.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அடல் ஓய்வூதிய திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய நன்மைகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பங்களிப்பு தொகைக்கான பலன்கள் குறித்து வங்கி அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கனரா வங்கியின் கோயம்புத்தூர் மண்டல தலைமை அதிகாரி – துணை பொது மேலாளர் கே.ஆர்.சைலஜா, நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் முகமது உசேன், Pension fund regulatory and development Authorityயின் அதிகாரிகள் பிரவேஷ்குமார் மற்றும் அஜய்குமார் பொடிசெட்டி ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தின் நன்மைகள் குறித்து விளக்கினர்.
இதனை தொடர்ந்து ஆடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக கோயம்புத்தூர் மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் வங்கி அதிகாரிகள், அடல் ஓய்வு திட்ட பயனாளிகள் மற்றும் முதியோர் நல சங்கத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.





