பாஜக திமுக இணைகிறதா?- வானதி சீனிவாசன் அளித்த பதில்…

கோவை: அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் தேசிய கைத்தறி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது, ஆகஸ்ட் 7ஆம் தேதி மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒவ்வொரு வருடமும் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுவதற்காக அறிவிப்பு செய்து ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதாக கூறியவர், அந்த வகையிலே கடந்த எட்டு வருடங்களாக கோவை மக்கள் சேவை மையமும், ஐடியா மேக்ஸ் நிறுவனமும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கு ஹேண்ட் லூம் பேஷன் ஷோ என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் இதில் போட்டியாளர்களாக பங்கேற்று இருப்பதாகவும், கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட மாணவர்கள் தொழில் செய்வதாகவும், ஒவ்வொரு வருடமும் இதில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் நாடு முழுவதும் இருக்கின்ற லீப்பை பற்றி பயன்படுத்துவது அதை அழகாக வெளிப்படுத்துவது அதேபோன்று இந்த நிகழ்ச்சி ஒரு ஆடை அலங்கார அணிவகுப்பு மட்டுமல்லாமல் அவர்களிடம் கைத்தறி தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டு அந்த அறிவும் பரிசோதிக்கப்படுவதாகவும், தெரிவித்தார்.

நெசவாளர்கள் இன்று நமது நாட்டின் பாரம்பரிய, சிறப்பை அடிப்படை திறனை இவையெல்லாம் வெளிப்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு வேலைகளுமே, அடுத்து வரக்கூடிய சமுதாயம் பாராட்டி, நேசிக்கும் என்றால் அவர்களுடைய தொழிலும் மேம்பட வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நோக்கம் என்றார்.

Advertisement

சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்தான தீர்மானம் குறித்த கேள்விக்கு, நீட் தேர்வு என்பது பா.ஜ.க அரசு கொண்டு வரவில்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பினால் வந்தது. தமிழகத்தில் உண்மையாகவே நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால், அதிலும் புதிதாக வந்து இருக்க கூடிய அரசு அவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடலாமே தவிர, நீட் தேர்வு ரத்து என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு மீறுவதாக இருக்கும். அதனால் நீட் தேர்வில் எங்கெங்கெல்லாம் மாணவர்களுக்கு சிரமம் இருக்கிறதோ ? மொழி பிரச்சனை இருக்கிறதோ ? அதை ஒவ்வொன்றாக மத்திய அரசு தீர்த்துக் கொண்டு உள்ளதாக கூறியவர். இந்த முறை கூட நீட் தேர்விற்காக கடந்த ஒரு தேர்வில் அவ்வளவு தூரம் கஷ்டம் என்று வந்தது. அதை புரிந்து கொண்டு இரண்டாவது முறை மிக சிறப்பாகவே தேர்வை நடத்தி உள்ளதாகவும், அதுவும் நல்ல முறையில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளதாக தெரிவித்தவர், தமிழ்நாட்டில் இருந்து கூட நீட் தேர்வு எழுதுகின்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், தேர்வு பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததாக கூறினார்.

பெற்றோர்களும், மாணவர்களும் ஏற்றுக்கொன்றார்கள் அதிலும், தமிழகம் போன்று அதிகமாக கல்வி அறிவு பெற்று இருக்கின்ற மாநிலத்திலும், கூட அரசாங்கம் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு வந்ததற்கு பின்பு தான் அதிகமாக மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். ஏழைக் குழந்தைகள் நீட் தேர்வு வந்த பிறகு தான் அதிகமாக கல்லூரிகளில் செல்வதாகவும், இதற்கு முன்பு பணம் இருப்பவர்கள் மட்டும் தான் போக முடிந்ததாகவும் தெரிவித்தவர், அதனால் நீட் தேர்விற்கு பின்னால் நிறைய மாற்றங்களை சமுதாயம் ஒத்துக் கொண்டு விட்டதாகவும், அரசியலுக்காக வேண்டி என்ன வேண்டுமானாலும் பேசிக்கலாம் என்றார்.

Advertisement

குறைவான மதிப்பெண் இருந்தாலும், பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிக்கு செல்லுகின்றது குறித்து சௌமியா அன்புமணி பேசியது குறித்தான கேள்விக்கு
அவர்கள் எப்படி ? அதை கூறுகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும், பொதுவான மதிப்பெண்கள் எடுத்தவர்கள் அதை மீறி நீட் தேர்வு பெறாமல் செல்வது வாய்ப்பில்லை. மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தக் குழந்தைகள் வேறு ஏதாவது வாய்ப்பு கிடைத்து சென்று இருந்தால், அந்த இடத்திற்கு நிரப்புவதற்காக குறைத்த மதிப்பெண் எடுத்தவர்கள் வந்து இருக்கலாம், அதனால் அப்படி ஏதேனும் முறைகேடு இருந்தால், அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு, ஆதாரத்தோடு தெரிவித்தால் அதையும் சரி செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

த.வெ.க அரசு 3 மாத ஆட்சியின் செயல்பாடு குறித்தான கேள்விக்கு இந்த அரசு அது பாட்டுக்கு போய்க் கொண்டு உள்ளது. அவ்வளவு தான். ஏனென்றால் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு கொடுத்தார்கள் எதுவுமே நடக்கவில்லை, பட்ஜெட்டில் ஆவது வருமா ? என்று எதிர்பார்த்ததாகவும், கடைசியில் பட்ஜெட்டிலும் ஒன்றுமில்லை காலி என்று கூறி விட்டார்கள். நடக்கிறதுக்கு என்ன இருக்கிறது அது பாட்டுக்கு நடக்கிறது. அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் தாய் மகள் கொலை செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு;
கடந்த மூன்று மாத காலமாக ஆட்சியில் உள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கேயும் குறையவில்லை, சட்டம் – ஒழுங்கு என்பது மாறவில்லை, அதனால் மாற்றம் என்பது சேரில் அமர்ந்து இருப்பவர்கள் மாறி இருக்கிறார்கள் தவிர, ஆனால் தமிழ்நாட்டில் எந்த நிலைமையும் மாறவில்லை எனவும் கூறினார்.

கோவை – மதுரை மெட்ரோ திட்டம் ரத்து குறித்தான கேள்விக்கு, மத்திய அரசு மெட்ரோ கொடுக்கவில்லை என்று சொன்னால் ஏன் கொடுக்கவில்லை ?எதற்காக நிராகரித்தார்கள் ? இந்த முறை போகும்போது சரி செய்தார்களா ? எதுவும் நடக்கவில்லை, இந்த அரசு டி.பி.ஆர்.ஐ சரி செய்து எப்படி நமக்கு மெட்ரோ வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதோ ? அதை உருவாக்க வேண்டும் தவிர, அதற்கான ஆவணங்கள் கொடுக்க வேண்டும் தவிர, திருப்பி, திருப்பி ஒரே மாதிரியான டி.பி.ஆர்.ஐ அனுப்பினால் ஒரே மாதிரியான பதில் தான் திரும்பி வரும்.

அதனால் ஆவணங்களை டி.பி.ஆர்.ஐ சரி செய்வது தான் முக்கியமானது நமது மெட்ரோ திட்டத்தில் இதற்காக ஒரு குழு கமிட்டி கூட அமைத்து மதுரை – கோவை எப்படி ? நேஷனல் பாலிசி ஆப் மெட்ரோவில் நமக்கு அமைவது போன்று தயார் செய்து கொடுத்தால், நிச்சயமாக மத்திய அரசு அது கொடுக்க தயார் என்றார்.

பா.ஜ.க வும் – தி.மு.க வும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு அரசியல் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் கிடையாது.
பா.ஜ.க – தி.மு.க கூட்டணி உருவாகிறதா ? என்ற கேள்விக்கு, அது உருவாகும் பொழுது சொல்லுவார்கள் உருவாவதற்கு முன்னால் நீங்களாகவே உருவாக்கி விடுவீர்கள் போல அதற்கான சூழல் வரும் பொழுது பார்க்கலாம் என கூறினார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பொது மக்களிடம் அன்பாக அணுகுவதற்கு காவல்துறையினருக்கு பயிற்சி…

கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு அன்பான அணுகுமுறை சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் அன்பாகவும்நட்புறவாகவும் மற்றும் மனிதநேயமிக்க...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.