ரத்தினபுரியில் பட்டபகலில் கொள்ளை

கோவை: ரத்தினபுரியில் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ரத்தினபுரி பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தமிழ் செல்வி (48). இவர் நேற்று காலை வீட்டின் முன்பக்க கதவை பூட்டாமல் குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார். வீட்டிற்குள் ஏதோ சத்தம் வருவதை கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் இருந்து ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறையில் சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ் செல்வி ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டபகலில் வீடு புகுந்து பணம், செல்போன் திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...