கோவையில் டிரைவர் செய்த காரியம்; உயிர் பிழைத்த பெண் பயணி! – வீடியோ உள்ளே

கோவை: பேருந்துக்குள் பெண் பயணி மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கே பேருந்தை செலுத்தி உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர் – நடத்துநருக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement

கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த ஸ்ரீ கணேசா பேருந்தை ஓட்டுநர் லோகேஷ் இயக்கி வந்தார். பேருந்து கோவை பீளமேடு அருகே வந்தபோது, அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், நடத்துநர் பிரகாஷ் மற்றும் ஓட்டுநர் லோகேஷிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஓட்டுநர் லோகேஷ் சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்த பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு பேருந்தை திருப்பிச் சென்று, நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயில் வரை பேருந்தை செலுத்தினார்.

Advertisement

உடனடியாக மருத்துவப் பணியாளர்கள் அந்த பெண் பயணியை மீட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

சுமார் இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் பயணி உடல்நலம் தேறியதாக கூறப்படுகிறது.

Advertisement

Also Read:மார்ட்டின் குழுமங்களின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டினுக்கு பாராட்டு விழா; 50 ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு

பயணி ஒருவர் மயங்கியதை அறிந்தவுடன், ஒரு நொடியும் தாமதிக்காமல் பேருந்தை மருத்துவமனைக்கே செலுத்தி அவரது உயிரைக் காப்பாற்ற உதவிய ஓட்டுநர் லோகேஷ் மற்றும் நடத்துநர் பிரகாஷுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

இன்றைய ராசிபலன் (ஜூலை 28): 12 ராசிகளுக்கான பலன்கள்

ஜூலை 28-ஆம் தேதிக்கான 12 ராசிகளின் தினபலன்களை அறிந்து கொள்ளுங்கள். வேலை, தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம், கல்வி மற்றும் உறவுகள் தொடர்பான பலன்களை தெரிந்துகொள்ளலாம்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...