கோவை: ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. வீட்டு வசதிகள் குறித்து சுய கணக்கெடுப்பு ஜூலை 17 ம் தேதி முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது.
இந்த சுய கணக்கெடுப்பு பணி என்பது
ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
மக்கள் தாங்களாகவே விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த கணக்கெடுப்பின் கீழ் வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, மின்சாரம், சமையல் எரிபொருள் உட்பட 33 கேள்விகள் மூலம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது.
ஜூலை 31 நேற்றுடன் ஆன்லைன் சுய கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 118204
பேர் ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 62950 பேர் சுயகணக்கெடுப்பு பணியில் விபரங்களை பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் சேர்த்து 1011219 பேர் சுயகணக்கெடுப்பின் கீழ் தங்களது தகவல்களை பதிவு செய்துள்ள நிலையில் ஆன்லைன் சுயகணக்கெடுப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.





