லேப்டாப்புடன் நின்ற கோவை மாணவிகள் – வண்டியில் இருந்து இறங்கிய ஸ்டாலின்!

கோவை: கோவையில் தன்னைச் சந்திக்க அரசு வழங்கிய லேப்டாப்புடன் காத்திருந்த கல்லூரி மாணவிகளை, வண்டியில் இருந்து இறங்கிச் சென்று சந்தித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Advertisement

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காந்திபுரம் பகுதியில் பெரியார் அறிவுலக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு போத்தனூர் பகுதியில் உள்ள காந்தி மியூசியம் சென்றார்.

அப்போது சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரி அருகே, அரசு வழங்கிய மடிக்கணினிகளுடன் நூற்றுக்கணக்கான மாணவிகள் சாலையோரம் திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த முதலமைச்சர், உடனே தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

Advertisement

முதல்வரிடம் அம்மாணவிகள் மடிக்கணினி வழங்கியதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும், பல்வேறு மாணவிகளும் பொதுமக்களுக்கும் முதல்வருக்கு கைக்கொடுத்து நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

அனைவரது வரவேற்பையும் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து போத்தனூர் காந்தி மியூசியம் புறப்பட்டார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...