64வது தேசிய மருந்தியல் தினம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோவையில் 64 ஆவது தேசிய மருந்தியல் வார விழாவை ஒட்டி
போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Advertisement

64 ஆவது தேசிய மருந்தியல் வாரம் 2026 ஐ ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் மருந்தியல் கல்லூரி மற்றும் இந்திய மருந்தியல் சங்கம் இணைந்து துடியலூரில் போதைப்பொருள் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் போருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

இதில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மது போதையில் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியை துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரூபன்ராஜ் பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நிகழ்வு தொடங்குவதற்கு முன் மாணவர்களும் ஆசிரி யர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement

இந்நிகழ்வில் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர் சண்முகம், இயக்குநர் முனைவர் சிவக்குமார், மருந்தியல் கல்லூரி முதல்வர் அழகர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

700க்கும் மேற்பட்ட மருந்தியல் மாணவ மாணவிகள் மற்றும் 42 ஆசிரியர்கள் கலந்து கொண்டு கைகளில் போதைப் போருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, போதை பொருள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். பேரணியானது துடியலூரில் தொடங்கி மேட்டுப்பாளையம் கோவை சாலையில் விஸ்வநாதபுரம் வரை சென்றது.

Advertisement

இந்த நிலையில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மது போதையில் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...