தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய கோவை ஆட்சியர்…

கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர் அவர்களுடனே அமர்ந்து உணவருந்தினார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், பொலிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி (offline) வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி சாலை, சுகுணா கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கி, தூய்மைப்பணியாளர்களுடன் உணவு அருந்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

Advertisement

இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 9454 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் தூய்மைப்பணியாளர்களுக்கான உணவு வழங்கம் திட்டத்தின் கீழ் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...