மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்த கோவை தவெக பெண் வேட்பாளர்

கோவை: மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தவெக வேட்பாளர் கனிமொழி.

Advertisement

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழக வேட்பாளர் கனிமொழி துண்டு பிரசுரங்களை வழங்கி தன்னை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் மக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சியினர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பல்வேறு கடைகளுக்குச் சென்றும் பெட்ரோல் பங்கிற்கு சென்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உட்பட பல்வேறு கடைகளுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...