சர்வதேச மகளிர் தினம்- கோவையில் பெண் காவலர்கள் விழிப்புணர்வு பேரணி…

கோவை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர பெண் காவலர்கள் பேரணி மேற்கொண்டனர்.

Advertisement

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பெண்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை அரசு சார்பிலும் தனியார் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

கோவையிலும் பல்வேறு பகுதிகளில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பந்தய சாலை பகுதியில் தனியார் அமைப்பு சார்பிலும் அரசு சார்பிலும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர பெண் காவலர்கள் இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

கோவை பந்தய சாலையில் முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாநகரப் பெண் காவலர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

Advertisement

இதில் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் மாநகர காவல் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிங்க் நிற காவல் ரோந்து வாகனமும் இந்த விழிப்புணர்வு பேரணியில் இடம் பெற்றிருந்தது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...