சமரச தீர்வு முகாம் 3.0- கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விழிப்புணர்வு…

கோவை: கோவையில் சமரச தீர்வு முகாம் 3.0 விழிப்புணர்வு பேரணி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடைபெற்றது.

Advertisement

சென்னை உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையம் காட்டியுள்ள வழிகாட்டுதலின்படி பல்வேறு பகுதிகளில் சமரச தீர்வு முகாம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் சார்பு நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் நிர்மலா மகளிர் கல்லூரி மாணவிகள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரயில் நிலையம் கோவை அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

Advertisement

இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பொது மக்களை சந்தித்து சமரச தீர்வு முகாம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி எடுத்துரைத்தனர். சமரசம் என்றால் என்ன அதன் நோக்கங்கள் என்ன எதற்காக அதனை செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இந்த பேரணியில் மாவட்ட முதன்மை நீதிபதியும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி இது குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...