மாணவ, மாணவிகளுக்கு இலவச இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி- உள்ளே லிங்க்

கோவை:பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப மாணவர்கள் 40 பிரிவுகளில் இலவச தொழில் நுட்ப இணைய பயிற்சியில் ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் கலந்து கொள்ளலாம்.

Advertisement

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த, உயர் கல்வி உதவி தொகை பெறும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிக்கும்போது வேலை வாய்ப்பு பெறும் வகையில், 40 பிரிவுகளில் நவீன தொழில் நுட்ப இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதில், ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர், ஏஐ டேட்டா இன்ஜினியர், ஹார்டுவேர் இன்ஜினியர், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட 40 பிரிவுகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன.

Advertisement

மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தாங்கள் இருக்கும் இடத்திலேயே இந்த பயிற்சியினை ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் மூலம் பயிலலாம். பயிற்சி வகுப்பு 6 மாத காலம்.

இதற்கு https://registration.tnbocw.com/application என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் அளிக்கலாம்.

Advertisement

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...