கோவையில் டேட்டிங் ஆப்; நாதக ஆர்ப்பாட்டம்!

கோவை: டேட்டிங் செயலியை உள்ளிட்டவற்றை தடை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

டேட்டிங் செயலியை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

டேட்டிங் செயலியால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இளம் சமுதாயம் சீரழிவதாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அச்செயலிக்கான கண்டனங்கள் வலுத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திரண்டு டேட்டிங் செயலி உள்ளிட்டவற்றை உடனடியாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

இது போன்ற செயலால் பெண்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்து சட்டரீதிக்கு உட்பட்டு இவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இந்த செயலியின் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயன்படுத்துபவர்களை விட அதனை செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Advertisement

எனவே மத்திய மாநில அரசுகள் இரண்டுமே தங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து அந்த டேட்டிங் செயலி உள்ளிட்டவற்றை தடை செய்ய வேண்டும், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...