பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு விழா உற்சாகம்…

கோவை:பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சித்திரைமேழி ஆனி உற்சவ நாற்று நடவு விழா விமர்சையாக நடைப்பெற்றது.

Advertisement

உலக மக்கள் நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைமேழி ஆனி உற்சவ நாற்று நடவு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 13-ந்தேதி தேவேந்திரகுல வேளாளர் மடத்தில் கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 7 நாட்களாகக் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் ஸ்ரீ கேதாரீஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொன்னேர் பூஜையும், ஸ்ரீ கேதாரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் தேவேந்திரகுல வேளாளர் மடத்திற்கு எழுந்தருளும் நிகழ்வும் நடைப்பெற்றது. அங்கு செந்நெல் நாற்று எடுத்து வரப்பட்டு, கோவில் வயலில் இறங்கி நாற்று நடவு செய்யும் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா நடந்தது.

Advertisement

தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்று நடுவது செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் சப்பரத்தில் நாற்று நடவு வயலுக்கு எழுந்தருளி, பொருள் வேண்டுதல் நிகழ்ச்சியும், கோவிலைச் சுற்றி திருவீதி உலாவும் நடந்தது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், தேவேந்திர குல வேளாளர் சமூக மண்டப அறக்கட்டளையும் இணைந்து செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டர்‌.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சுதேசி மேளா நிகழ்ச்சி துவங்கியது…

கோவை: கோவையில் சுதேசி மேளா நிகழ்ச்சி துவங்கியது. Swadeshi Jagran Manch அமைப்பு சார்பில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் அரங்கில் 'கோவை சுதேசி மேளா' எனும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.