முடிவடைந்த மீன்பிடித் தடைக்காலம்- கோவையில் அலைமோதிய கூட்டம்…

கோவை: மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில் கோவையில் மீன்களை வாங்க ஆர்வமுடன் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

தமிழகத்தில் வருடாந்திர மீன்பிடி தடைகாலம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததை அடுத்து, மீன்கள் வரத்து அதிகமாகி உள்ளது.

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள மீன் அங்காடிக்கும் மீன் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தடைகாலம் முடிந்த பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று அதிகாலை முதலே உக்கடம் மீன் அங்காடியில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது.

கோவை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சில்லறை வியாபாரிகளும் மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மார்க்கெட்டிற்குள் நுழைவதற்கே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டது.

வாடிக்கையாளர்களின் வாகனங்கள் மற்றும் மீன் ஏற்றி வந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், உக்கடம் மற்றும் அதன் முக்கிய இணைப்புச் சாலைகளில் இன்று அதிகாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

மீன் வரத்து அதிகரித்துள்ள போதிலும், மக்களின் தேவை மிக அதிகமாக இருந்ததால் உக்கடம் மார்க்கெட் இன்று காலை முதலே பெரும் பரபரப்புடன் இயங்கி வருகிறது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கொண்டையை மறைக்காத அண்ணாமலை- கோவையில் மாணிக்கம் தாகூர் தாக்கு!

கோவை: கொண்டையை மறைக்காமல் அமெரிக்காவில் இருந்து ஒருவர் வருகிறார் என அண்ணாமலையை மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். கோவை, சவுரிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க அரசை கண்டித்தும், நீட் தேர்வு பாதிப்புகளை விளக்கியும்...

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...