கோவை: நீட் மறுதேர்வு நடைபெறும் கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு வருகிற 21 ஆம் தேதி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இன்று மறுதேர்வு நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் இதற்காக 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 7000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.15 மணி வரை நடக்கிறது. கோவையில் உள்ள தேர்வு மையங்களில் கடந்த முறையை காட்டிலும் சற்று கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டது.
ஒவ்வொரு மையத்திற்கும் தலா 10 காவலர்கள் வீதம் தேர்வு மையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் மேலும் தேர்வு எழுத வருபவர்களை தவிர்த்து வேறு 100மீ சுற்றளவுக்கு நிற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் என்னென்ன பொருட்களை கொண்டு வரலாம் என்னென்ன பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று முறையாக அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டு அதனைத் தாண்டி வேறு பொருட்களை கொண்டு வரும் பட்சத்தில் அவை அனுமதிக்கப்படவில்லை.


