ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தல்- கோவையில் இருவர் கைது…

கோவை: கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு போலிசார் கைது செய்தனர்.

Advertisement

ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தப்பதேதி வந்த இருவரை மதுவிலக்கு போலிசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கஞ்சா கடத்தல் குறித்து மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உக்கடம் வாலாங்குளம் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி சோதனையிட்டனர் . அதில் 21 கிலோ கஞ்சா மூட்டை இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவை பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் வீர சின்ன மருது என்பது தெரியவந்தது. அதனையடுத்து இருவரையும் போலீசார் பிடித்து மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

விசாரணையில் வேறு ஏதாவது வாகனத்தில் கஞ்சா கடத்தினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் , ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இருவரும் இணைந்து ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியில் இருந்து 21 கிலோ கஞ்சாவை வாங்கி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


இதனையடுத்து மணிகண்டன்,
வீரசின்னமருது ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் , கஞ்சா கடத்த பயன்படுத்தபட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...