பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சலுகை- அமைச்சர் விஜய்பாலாஜி…

கோவை: பருத்தி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு தேவையான சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் விஜய் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

Advertisement

கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு பஞ்சாலை கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனையகத்தில், தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது நமக்கு தேவையான பருத்தியில் சுமார் 3 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள பருத்தியை வெளிமாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறினார்.

Advertisement

மேலும், தமிழகத்திற்கு தேவையான அளவு பருத்தியை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு தேவையான சலுகைகள் மற்றும் ஆதரவுகளை வழங்கி, உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம் என தெரிவித்தார்.

இதற்காக ஒவ்வொரு பகுதியாக ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய தயாராக உள்ளனரா, எந்தெந்த பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

ஆய்வுகளின் அடிப்படையில், தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை கூடிய விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி உறுதியளித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...