வெகு விமர்சையாக நடைபெற்ற கோவை கற்கிமலை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை: கோவையில் கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் மகா அன்னதானம் விமர்சையாக நடைபெற்றது.

Advertisement

கோவை கணுவாய் அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் ஆறு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது.

கோவை கணுவாய் பகுதியில் அமைந்துள்ளது பழமையான அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் திருக்கோவில்
இக்கோவில் கோவில் புணரமைக்கப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்றது. மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.

அருள்மிகு குன்று பெருமாள் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது.

Advertisement

இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது. 108 மூலிகைகளைக் கொண்டு வேள்வி நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

கோபுர கலசங்களுக்கு டிரோன் மூலம் பூக்கள் தூவப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் டிரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்வில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அருள்மிகு கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் அறக்கட்டளை நிர்வாக குழு, திருப்பணிக்குழு மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...