கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.97 இலட்சம் மதிப்பீட்டில், பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர், 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.97 இலட்சம் மதிப்பீட்டில், பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை, மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூங்கா வளாகத்தில் மரக்கன்று நடவு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சிகிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்வடக்கு மண்டலம், வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.97 இலட்சம் மதிப்பீட்டில்பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையாளர், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, பூங்கா வளாகத்தில் மரக்கன்று நடவு செய்து, பணிகளை துவக்கி வைத்தார். இன்று இந்த நிகழ்வின் மூலம், வாகை மரம்வேப்பமரம், ஆலமரம்பிளே ஃப்ளவர் உள்ளிட்ட மொத்தம் 63 மரங்கள் நடவு செய்யப்பட்டது.




