ரயில் மோதி தாய் பலி; மகன் படுகாயம்… கோவையில் சோகம்!

கோவை: கோவையில் ரயில் மோதி பெண் ஒருவர் பலியானார். அவரது மகன் படுகாயமடைந்தார்.

Advertisement

புரூக்பீல்டு மால் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் பெண் மற்றும் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது. வாலிபர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த நவீனா (58), அவரது மகன் மனோகர் (28) என்பது தெரிய வந்தது.

Advertisement

இருவரும் சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையம் செல்ல வந்ததாக தெரிகிறது. ஆனால், அவர்கள் எதற்காக புரூக்பீல்டு ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர் என தெரியவில்லை.

அவர்கள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி அந்த பெண் பலியானாரா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...