சபரிமலை சீசன்; போத்தனூர் வழியாக 2 சிறப்பு ரயில்கள்!

கோவை: சபரிமலை சீசனை முன்னிட்டு போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து கேரளா செல்லும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து கொல்லம் வரை ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும்.

Advertisement

டிசம்பர் 27ம் தேதி மதியம் 1 மணிக்கு நரசாபூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண்:07125), மறுநாள் இரவு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் டிசம்பர் 29ம் தேதி அதிகாலை 2.30 மணிக்குக் கொல்லத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில் மறுநாள் இரவு நரசாபூர் சென்றடையும்.

அதேபோல் தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கொல்லம் வரை சிறப்பு ரயில் ஜனவரி 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். (வண்டி எண்:07127, 28) சேவை ஜனவரி 12 மற்றும் 19 தேதிகளில் நடைபெறும்.

Advertisement

இந்த சிறப்பு ரயில்கள் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தம் செய்யப்படும். ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 மற்றும் 3 அடுக்கு, ஸ்லீப்பர், பொதுப் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை கோவை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு பகிரவும்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...