மேஷம்
இன்று அஸ்வினி மற்றும் பரணி நட்சத்திரக்காரர்களுக்குச் சந்திராஷ்டமம் நிலவுவதால் நிதானமான போக்கைக் கையாள்வது அவசியம். புதிய தொழில் முதலீடுகளைத் தவிர்க்கவும், யாருக்கும் பெரிய தொகையை ஜாமீனாகக் கொடுக்க வேண்டாம். வாகனம் ஓட்டும்போது வேகத்தைக் குறைத்துச் செல்வது நல்லது. தேவையற்ற உணர்ச்சிவசப்பாடுகளைத் தவிர்த்து, அமைதியாகப் பணிகளைத் தொடர்வது நன்மையளிக்கும். ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு தடைகளை அகற்றும்.
ரிஷபம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் மறைந்து நல்ல சுமுகமான சூழல் நிலவும். குடும்பத்தில் பிள்ளைகளின் உயர்கல்வி சார்ந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். காதலர்களுக்கு இடையே புரிதலும் அன்யோன்யமும் பெருகும். தூரத்து உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் தேடி வரும். மாலையில் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று மன நிம்மதி பெறுவீர்கள்.
மிதுனம்
அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதி நிலையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்படும். பழைய கடன்களை அடைப்பதற்கான யோகம் கைகூடும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல சாதனைகளைப் புரிவார்கள். ஒவ்வாமை மற்றும் வயிறு தொடர்பான சிறு உபாதைகள் தோன்றி மறையலாம். சீரான உணவுப் பழக்கம் ஆரோக்கியத்தைக் காக்கும்.
கடகம்
தொழில் விரிவாக்கத்திற்காக எடுத்த முயற்சிகளுக்கு வங்கியிலிருந்து எதிர்பார்த்த கடன் உதவிகள் எளிதாகக் கிடைக்கும். புதிய வீடு அல்லது சொத்து வாங்குவதற்கான ஆவணப் பணிகள் சுமுகமாக முடியும். கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் ஏற்படும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
பணியிடத்தில் உங்களின் தொலைநோக்குச் சிந்தனைகளுக்கு மேலதிகாரிகள் அங்கீகாரம் வழங்குவார்கள். நிலம் மற்றும் மனை விற்பனைத் துறையினருக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சுபச் செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற பணவரவும் தடையின்றி இருக்கும். இரவில் போதுமான ஓய்வெடுப்பது உடல் சோர்வைப் போக்கும். தந்தையின் வழியில் எதிர்பார்த்த பூர்வீகச் சொத்து உதவிகள் வந்து சேரும்.
கன்னி
லாபகரமான புதிய முதலீட்டு வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டும் பதவியுயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. சகோதர வழியில் நிலவிய மனக்கசப்புகள் அகன்று ஒற்றுமை பலப்படும். ஆராய்ச்சி மாணவர்களுக்குக் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கச் சாதகமான நாள். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டவர்களுக்கு நல்ல தகவல்கள் கைக்கு வந்து சேரும்.

துலாம்
குடும்பப் பொறுப்புகளைச் செவ்வனே செய்து முடித்து பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வர்த்தகத்தில் புதிய சவால்களைத் திறம்பட எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபட புதிய வழிகள் பிறக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் கூடும். கணவன்-மனைவி இடையே பரஸ்பர அன்பு அதிகரிக்கும். யோகா மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள முடியும்.
விருச்சிகம்
நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும் நாளாக அமையும். கட்டடக் கலை மற்றும் பொறியியல் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய புராஜெக்ட்டுகள் கைவசம் வரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடினாலும் அதை எளிதாகக் கையாளுவீர்கள். காதலில் இருந்த தடைகள் விலகி திருமணம் நோக்கி நகரும். கண் மற்றும் தொண்டை சார்ந்த அசதிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறவும்.
தனுசு
வர்த்தகப் விரிவாக்கத்திற்காக மேற்கொள்ளும் குறுகிய காலப் பயணங்கள் மூலம் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நிதி மேலாண்மையில் விழிப்புடன் செயல்படுவது சேமிப்பை உயர்த்தும். பிள்ளைகளின் கலைத் திறன்களை ஊக்குவித்து மகிழ்வீர்கள். மாலையில் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவது ஆத்ம திருப்தியையும் மன அமைதியையும் தரும்.
மகரம்
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர புதிய உத்திகளைக் கையாண்டு சந்தையில் முத்திரை பதிப்பீர்கள். பழைய முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்ற வேலையற்ற இளைஞர்களுக்குச் சாதகமான உத்தரவுகள் வரும். தம்பதியரிடையே புரிதல் அதிகரிக்கும். உணவுப் பழக்கத்தில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வது செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும்.
கும்பம்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதால் பணிச்சூழல் சாதகமாக இருக்கும். நிலம் மற்றும் வாகனம் வாங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குக் கவனம் கூடும். உறவினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகமும் சுபநிகழ்ச்சிப் பேச்சுவார்த்தைகளும் கலைகட்டும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு லாபம் தாராளமாக இருக்கும்.
மீனம்
தொழிலில் நிலவி வந்த போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பழைய பாக்கித் தொகைகள் தடையின்றி கைக்கு வந்து சேரும். குடும்பத்தினருடன் இனிமையான நேரத்தைச் செலவிடுவீர்கள். மூட்டு மற்றும் தசைப் பிடிப்பு தொடர்பான அசதிகள் அகலும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு நற்பெயர் பெறுவீர்கள்.




