கோவையில் நடைபெற்ற My Bharat தமிழ்நாடு நிகழ்ச்சி…

கோவை: கோவையில் My Bharat தமிழ்நாடு Interstate youth exchange நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற நடைபெற்றது.

Advertisement

கோவை குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள கே.வி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் உட்பட 32 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், கம்மம், மெகபூப் நகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கடந்த 9ம் தேதி முதல் இன்று வரை 5 நாட்கள் கோவையில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் ஆன்மீக தலங்களுக்கும், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்கும் மாணவர்கள் சென்று அப்பகுதியின் கலாச்சாரம், உணவு முறை ஆகியவை குறித்து தெரிந்து கொண்டனர். மேலும், கே.வி மேலாண்மை கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு Personality development பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கோயம்புத்தூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Advertisement

மை பாரத் கோயம்புத்தூர் அலுவலகத்தின் மாவட்ட இளைஞர் அலுவலர் ஜோயல் பிரபாகர், கே.வி மேலாண்மை கல்லூரியின் இயக்குனர் குமார் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் அரசின் பங்கேற்பு சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் கலாச்சாரம் சார்ந்த நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...