விசில் பறக்க தோசை சுட்ட தவெக வேட்பாளர்
கோவையில் சாலையோர கடையில் தோசை சுட்டு தவெக வேட்பாளர் செந்தில்குமார் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாக்காளர்களும் நூதனமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
Read news:லிப்ட் கேட்ட பாம்பு; கோவையில் பரபரப்பு; VIDEO உள்ளே…
பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கும் வாக்காளர்கள் மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உதவி புரிந்தும், இளைஞர்களுடன் விளையாடியும் வாக்கு சேகரிக்கின்றனர்.
இதனிடையே, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாரும் அதேபாணியை கையில் எடுத்துள்ளார்.
Read news:சிங்கப்பெண்ணே சீரியல் நடிகைக்கு ஒரு நாள் சம்பளம் எத்தனை தெரியுமா? தலையே சுத்துதே!
இன்று கோவை பூமார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர், அங்கிருந்த ஒரு சாலையோர கடைக்குச் சென்றார். அவருடன் வந்த தவெக தொண்டர்கள் விசில் ஊதித்தள்ள,
சாலையோர உணவுக் கடைக்குச் சென்ற அவர், அங்கு தோசை சுட்டு, அந்த கடைக்கார பெண்மணியிடம் துண்டு பிரசுரத்தைக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

