வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெறுங்கள்; சுயேட்சை வேட்பாளரின் விநோத கோரிக்கை!

கோவை: அனைவரும் வாபஸ் பெற்ற தன்னை வெற்றி அடைய செய்யுங்கள் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

அனைத்துக்கட்சி தலைவர்களும், தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெறச்செய்து, தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டுமென, சுயேட்சை வேட்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் அதிகளவிலான விஸ்வகர்மா மக்கள் வசித்து வருகின்றனர். எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விஸ்வகர்மா மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

தங்க நகை தயாரிப்பு தொழிலில் போதியளவு வேலைகள் இல்லாததால், , அவர்களது குடும்பங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் இந்த நிலையில் விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் தலைவர் வேல்முருகன் தொண்டாமுத்தூர் மற்றும் கோவை தெற்கில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Advertisement

அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தஙகளது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை , வாபஸ் பெறச்செய்து தன்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் அப்போதுதான் விஸ்வகர்மா மக்களின் பிரநிதியாக இருந்து சமூக மக்களின் குறைகளை எடுத்துக்கூறவும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்கு, வாய்ப்பாக இருக்கும் என்றார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...