இல்லத்தரசிகளே கவனம்; கோவையில் சோகம்!

கோவை: கோவையில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் பகுதியை சேர்ந்தவர் பத்ருதீன் (40). இவரது மனைவி சாய்ரா பானு (38). கடந்த 8ம் தேதி சாய்ரா பானு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ பரவியது. வலியால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் பத்ருதீன், மனைவி மீது பிடித்த தீயை அணைக்க முயன்றார். அப்போது அவருக்கும் உடலில் காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று சாய்ரா பானு பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

பத்ருதீன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமையல் செய்த போது தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...