கோவையில் காரை வழிமறித்து 1.25 கிலோ நகை கொள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்!

கோவை: கோவையில் காரை வழிமறித்து தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த ஜெய்சன் என்ற தங்க நகை பட்டறையாளர், தனது கடையில் பணியாற்றும் ஊழியர் விஷ்ணுவுடன் சென்னை சென்று 1.25 கிலோ தங்கக் கட்டியை வாங்கி ரயில் மூலம் இன்று காலை கோவையை வந்தடைந்தார்.

பின்னர் கோவையில் இருந்து இருவரும் கார் மூலம் பாலக்காடு நோக்கி புறப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில், க.க.சாவடி அருகே அவர்கள் வந்த போது, லாரியில் வந்த ஒரு கும்பல் காரை மறித்துள்ளது. தொடர்ந்து மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து .ஜெய்சன் மற்றும் விஷ்ணுவை காரில் இருந்து கீழிறக்கி விட்டு, தங்கக்கட்டியுடன் காரையும் எடுத்துக் கொண்டு மர்மமாக தப்பிச் சென்று உள்ளனர்.


இது தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் சமர்பிக்க அறிவுறுத்தல்…

கோவை: பத்ம விருதுகளை விண்ணப்பங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை பத்ம விபுஷன் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ வழங்க...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...