கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் 98% முடிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குழாய் பதிக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி திட்டபணிகள் அனைத்தும் விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏதுவாக,
மேட்டுப்பாளையம் சாலையில் முருகன் மில் முதல் ஐடிஐ வரையிலும், திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் முதல் ஒப்பணக்காரவீதி போத்தீஸ் சந்திப்பு வரையிலும், அவிநாசி சாலையில் பிஎஸ்ஜி கலைக்கல்லூரி முதல் தண்டு மாரியம்மன் கோயில் வரையிலும், குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் 24.07.2026 முதல் ஆரம்பிக்கப்பட்டு 31.08.2026-க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்கள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளர் தகட்டா ரவி தேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.




