சோமையம்பாளையத்தில் 5000 பனை விதைகளை நடவு செய்த ஆணிவேர் அமைப்பு

கோவை: கோவை சோமையம்பாளையம் ஊராட்சியில் ஆணிவேர் அமைப்பின் சார்பில் 5000 பனைவிதைகள் நடவு செய்யப்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் ஆணிவேர் தன்னார்வ அமைப்பு மூலம் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என இணைந்து வடள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தன்னார்வ பணிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டை மற்றும் காவல் நிலையம் முதல் மருதமலை அடிவாரம் வரை உள்ள நீர்வழிப்பாதைகளில் சுமார் 5,000 பனை விதைகளை நடவு செய்யும் பணிகள் தொடர்ந்து 5 ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

கடந்த 4 வாரங்களில் 4000 விதைகள் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் கூடுதலாக 1000 விதைகள் நடப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், ஆணிவேர் தன்னார்வலர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் இணைந்து ஒரே நாளில் பாரதியார் பல்கலைக்கழக்கம் பின்புறம் முதல் மருதமலை அடிவாரம் வரை 1000 விதைகளை நடவு செய்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.