கோவை: பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.
அதிமுக செய்தி தொடர்பாளர் சத்தியன் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவதூறாக பேசியதாகவும், பீகார் தேர்தலில் தமிழக மக்களை கேவலமாக பேசி வரும் பாஜகவினரை கண்டித்தும் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் இன்று எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட தமிழ்புலிகள் கட்சியினர் அதிமுக செய்தி தொடர்பாளர் சத்தியன் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாகவும் அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அவரது உருவ பொம்மையையும்

பீகார் தேர்தலில் தமிழக மக்களை கேவலமாக பேசி பிரச்சாரம் மேற்கொள்வதாக பாஜகவினரை கண்டித்து பிரதமர் உருவ பொம்மையையும் எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக அங்கிருந்த போலிசார் அந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட அக்கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில் போலிசார் அவர்களை கைது செய்தனர்.


 
                                    
