வடவள்ளி அருகே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: வடவள்ளி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Advertisement

கோவை, வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBBM) என்ற தனியார் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பள்ளி முதல்வரின் இ-மெயில் முகவரிக்கு, உங்கள் பள்ளியின் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலின் பேரில், அந்த பள்ளிக்கு விரைந்த வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் துறையினர் அந்த பள்ளியில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மேலும் பள்ளியில் உள்ள கழிப்பறைகள், மைதானம், காலி இடங்கள், ஆய்வகம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர்.

சில மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பள்ளியில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் அது வெறும் புரளி என தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Recent News

கோவையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து கழக அதிகாரி- 11 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த தண்டனை…

கோவை: 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp