SIR படிவம் குறித்த சந்தேகங்களுக்கு என்ன செய்யலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த தகவல்…

கோவை: SIR குறித்த சந்தேகங்களுக்கு இலவச தொடர்பு எண் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் SIR எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. SIR படிவங்களை அலுவலர்கள் வீடுவீடாக வழங்கி பூர்த்தி செய்த பின் திரும்ப பெற்று வருகின்றனர். இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அரசு பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு கோலங்கள் மூலம் SIR குறித்தும் தேர்தல் குறித்தும் வாக்களிப்பது அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர். இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் நேரில் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட ஆட்சியர், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோலங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Advertisement

இது குறித்து பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் என்ன சந்தேகம் இருந்தாலும் 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வால்பாறையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், இது குறித்து முழு விசாரணை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை CEO மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் இது குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.