கோவை அருகே காட்டு யானை உயிரிழப்பு- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்…

கோவை: கோவை அருகே குடல் அலர்ஜி காரணமாக ஆண் யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வனச்சரகம் நாத்துக்காடு அருகாமையில் ஆண் யானை ஒன்று காப்பு காட்டுக்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை அந்த யானை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில் உதவி வன பாதுகாவலர், கோவை வன சரக பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், வனசரக அலுவலர் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை அலுவலர், வன கால்நடை மருத்துவர்கள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மடத்தூர் கால்நடை மருத்துவர் குழுவினரால் அந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

பிரேத பரிசோதனையில் உயிரிழந்த ஆண் யானைக்கு 20 முதல் 25 வயது இருக்கலாம் எனவும் குடல் அலர்ஜி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது மேலும் உயிரிழந்த யானையின் உறுப்பு மாதிரிகள் மருத்துவ குழு மூலம் பரிசோதனைகளுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் வனவிலங்கு அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.