நல்லாம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

கோவை: நல்லாம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி விளக்குகளை கொள்ளையடித்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நல்லாம்பாளையம் ஓம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (66). இவர் கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி குடும்பத்துடன் பெங்களூரு சென்றார்.

Advertisement

இந்த நிலையில் 18ம் தேதி ஹரிஹரனின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஹர்ஷவர்தினி என்பவர் ஹரிஹரனுக்கு போன் செய்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் உடனே கோவை திரும்பினார். வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பாரத்த போது பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த 69 கிராம் எடை உள்ள வௌ்ளி விநாயகர் சிலை, 84 கிராம் எடையுள்ள 2 வெள்ளி காமாட்சி விளக்கு ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஹரிஹரன் கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றினர்.

Advertisement

தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா கட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து ஹரிஹரன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் ஹரிஹரன் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது காந்திபார்க் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த கவிக்குமார் (48) மற்றும் கீரணத்தம், குட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (36) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அப்போது மாநகரில் பதுங்கி இருந்த கவிக்குமார் மற்றும் ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

டெங்கு கொசுப் பரவல்- கட்டிட உரிமையாளருக்கு கோவை மாநகராட்சி 50,000 அபராதம்…

கோவை: டெங்கு கொசுப் புழுக்கள் கண்டறியப்ப கட்டிட உரிமையாளருக்கு 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பத்தூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயர்கள்....

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...