கோவை: கோவையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் புதியதாக 7100 பயனாளிகளுக்கு 10.22 கோடி மதிப்பீட்டில் ஒய்வூதிய திட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 260 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உங்களுடன் ஸ்டாலின் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் முதல்வரால் இன்று வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் 7100 பயனாளிகளுக்கு ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் ஒய்வூதிய திட்ட உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் 260 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளையும் 150 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளும்
குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.25.36 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவியும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.53,520 மதிப்பில் தையல் இயந்திரங்களையும்,
20 பயனாளிகளுக்கு ரூ.145இலட்சம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.30,64 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.56,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.30.54 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் என மொத்தம் 260 பயனாளிகளுக்கு ரூ.192 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.

