பள்ளிகளில் டெண்டர் எடுத்து தருவதாக முட்டை வியாபாரிடம் ரூ.7.80 லட்சம் மோசடி- 3 பேர் மீது வழக்குபதிவு

கோவை: பள்ளிகளில் டெண்டர் எடுத்து தருவதாக முட்டை வியாபாரிடம் ரூ.7.80 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (52). அவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு பாஸ்கரனுக்கு, ஸ்டீபன் என்பவர் அறிமுகமானார். அவர், பாஸ்கரனிடம் அரசு பள்ளிகளில் முட்டை விநியோகம் செய்ய டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும், சேலத்தில் உள்ள தனக்கு தெரிந்தவர்கள் மூலம் டெண்டர் எடுத்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு பாஸ்கரன் சமதம் தெரிவித்து டெண்டர் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 5 தேதி ஸ்டீபன் போனில் பாஸ்கரனை அழைத்து டெண்டர் தயாராகி விட்டதாகவும், சேலம் வந்து பெற்று கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து பாஸ்கரன் சேலம் சென்றார்.

அங்கு ஸ்டீபன் டெண்டர் ஆவணங்களை கொடுத்து ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்தை டெண்டர் தொகை செலுத்த வேண்டும் என்றுள்ளார். இதை தொடர்ந்து பாஸ்கரன் ரூ. 5 லட்சத்தை ஸ்டீபனிடம் கொடுத்தார்.

Advertisement

மீதி தொதை ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை ஸ்டீபன் தெரிவித்த பிரின்சி தெரசா என்பவரது வங்கி கணக்கில் செலுத்தினார். அதன் பின்னர் பாஸ்கரன் டெண்டர் ஆவணங்களை எடுத்து கொண்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு திட்ட அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு அந்த ஆவணங்களை கொடுத்து தகவல்களை கேட்டார். அப்போது அந்த ஆவணங்களை பார்த்த அதிகாரிகள், அது போலி டெண்டர் ஆவணங்கள் என தெரிவித்தனர்.

Advertisement

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் உடனே ஸ்டீபனை தொடர்ப்பு கொண்டு தகவலை தெரிவித்து, தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் பாஸ்கரன் கோர்ட் மூலம் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் ஸ்டீபன், அவரது கூட்டாளிகள் பிரின்ஸ், பிரின்சி தெரசா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 1
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...