கோவை அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்!

கோவை: கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று காலை 9 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு நடத்தி, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

கல்லூரி முதல்வர் எழில் மற்றும் கோவை அரசு கலைக்கல்லூரி வேலைவாய்ப்புக் குழுவினர் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...