மருதமலை உண்டியலில் குவிந்த தங்கம், வெள்ளி!

கோவை: கோவை மாவட்டம் பேரூர் வட்டத்திற்குட்பட்ட மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ரூ.1.38 கோடி காணிக்கையாக பெறப்பட்டன.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாது, சுற்றுவட்டார மாவட்ட மக்களும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

இதனிடையே மருதமலை கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு, பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணப்பட்டன.

திருக்கோவில் தக்கார் ஜெயகுமார், துணை ஆணையர் கவிதா, கோவை உதவி ஆணையர் உஷா நந்தினி, பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

கோவையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது…

இதில், தங்கம் 175 கிராம், வெள்ளி 5 கிலோ 527 கிராம், பித்தளை 39 கிலோ 400 கிராம் கிடைத்துள்ளது.

மேலும், ரொக்கமாக ரூ.1 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 232, ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 877 மதிப்பிலான காசோலை மற்றும் உண்டியலில் ரொக்க வரவாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 597 கிடைத்துள்ளது.

இதன் மூலம் மொத்தமாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 29 ஆயிரத்து 706 மதிப்பிலான காணிக்கைகள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் 800 அண்டாக்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி…

கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...